Tuesday, September 28, 2004

சிறு வயது சிந்தனைகள் - I

என்னவோ தெரியவில்லை? பொதுவாக, நம்மில் பலருக்கு, நம் பள்ளி/கல்லூரி நாட்களில் நாம் ரசித்துக் கேட்ட திரைப்பாடல்களும் அல்லது படித்த பாடங்களும் அல்லது கண்ட காட்சிகளும், அவற்றை நினைவில் கொள்ள நாம் பெருமுயற்சி எடுக்காதபோதும், நம் மனதில் ஆழமாக (உறக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டால் கூறுமளவு!) பதிந்து விடுகின்றன. அதே சமயம், வேலைக்கு சென்று நான்கைந்து வருடங்களில், இந்த திறமை குறைந்து, போகப்போக காணாமல் போய் விடுகிறது! இதற்கு, வயது கூடும்போது ஏற்படும் ஞாகபக் குறைவு ஓரளவு காரணமாக இருப்பினும், எனக்கென்னவோ, தற்போது நம்மில் பலர் சந்திக்கும் வேலைச்சூழல் தரும் அழுத்தமும், நாம் வாழும் ஒருவித monotonous வாழ்க்கையும் நம் ரசிப்புத்தன்மையை மங்க வைப்பதால் இந்நிலை உருவாகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது!

என் நினைவில் இன்னும் வாழும் சில திரைப்பாடல் வரிகள்!
1. காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்! சென்றதை எண்ணி அழுகின்றேன், வருவதை எண்ணி சிரிக்கின்றேன்!
2. காலடித் தாமரை நாலடி நடந்தால் காதலன் உள்ளம் புண்ணாகும்!
3. நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்த கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே! ... நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே, நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே, தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே, தெம்மாங்கு பூந்தமிழே, தென்னாடன் குலமகளே!
4. உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக்கை பட பாடுகிறேன் ... பொன்னெழில் பூத்தது புது வானில், வெண்பனி தூவும் நிலவே நில்!
5. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா, இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா!

நம்மில் திருமணமான பலருக்கு, குழந்தைகளுடன் செலவிட (வீட்டினுள்ளேயே, கேரம்,செஸ்,தாயம்,டிரேட் (Trade) விளையாட்டுக்கள் விளையாட) நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கும் படிப்பு சம்மந்தப்பட்ட வீட்டு வேலை (HOMEWORK) இப்போதெல்லாம் அதிகம் இருப்பதால், ஒருவருடன் ஒருவர் மகிழ்ச்சியுடன் விளையாடுவது என்பதே அவர்களுக்கு அரிதாகக் கிடைக்கும் பரிசு போலாகி விட்டது. பல குழந்தைகள் கிடைக்கும் நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலேயே செலவிடுகின்றன. நான் சிறுவயதில் (வறுமையிலும் கூட!) எவ்வளவு குதூகலத்துடன் விளையாட்டில் நேரம் கழித்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கிறேன். பள்ளிக்காலங்களில், TV-யில் நான் பார்த்த நிகழ்ச்சிகள் "ஒளியும் ஒலியும்" (வெள்ளிக்கிழமை தோறும்) மற்றும் Wimbledon Tennis Final ஆகியவைகளே!

மெரீனா கடற்கரையிலும், திருவல்லிக்கேணி குளக்கரைத் தெருக்களிலும், வற்றிய குளத்திலும், அகண்ட மொட்டை மாடியிலும் ஆடிய கபடி, underarm cricket, கில்லி, பம்பரம், கோலி (குழி, பேந்தா!), குச்சியால் சைக்கிள் டயர் விரட்டும் விளையாட்டுக்களையும், வீட்டுக்கூடத்திலும் ரேழியிலும் திண்ணைகளிலும் ஆடிய chess, Trump, அதி வேக ஊஞ்சல் விளையாட்டுக்களையும் நினைத்துப் பார்க்கும்போது Real Nostalgia!! அதற்காக, நான் படிப்பிலும் சோடை போகவில்லை! படிக்க வேண்டிய சமயத்தில் படித்து, மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவனாகவே திகழ்ந்தேன். 25 வருடங்களுக்குப் பின்னும் பல ஆசிரியர்களுடன் உறவு தொடர்கிறது.

அந்நாட்களில், "BOMBAY TRADE" என்ற விளையாட்டு எங்களிடையே மிகவும் பிரபலம்! பம்பாயிலுள்ள இடங்களின் (Juhu, Versova, Marine drive, Santacruz, Dadar, Malabar Hill, Chowpathy, Zaveri Baazar, Kalpadevi, Parel, Pydoni, Fort, Shivri etc) பெயர்களுடன் கூடிய ஒரு அட்டையும் (board), செயற்கை பணமும் (நோட்டு மற்றும் நாணய வடிவத்தில்), dice மற்றும் வீட்டைக் குறிக்கும் பல நிறத்து சிறு பிளாஸ்டிக் வடிவங்களும் இவ்விளையாட்டுக்கு பிரதானமானவை. இரு ஜோடிகள் எதிராடலாம்! Dice-ஐ உருட்டி, உங்களைக் குறிக்கும் coin-ஐ நகர்த்தி, உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு இடங்களை வாங்கலாம். எதிராளியின் coin உங்களுக்குச் சொந்தமான இடத்திற்கு வர நேர்ந்தால், உங்களுக்கு அதற்கான வாடகை தர வேண்டும்! ஓரே நிறமுடைய 3 இடங்களுக்கு சொந்தக்காரராகி விட்டால், இரட்டிப்பு வாடகை தர வேண்டும்!! அதே சமயம், நீங்கள் அவ்விடங்களில் 1,2,3 வீடு கட்ட (உங்களிடம் உள்ள பணத்தை பொறுத்து!) தகுதி பெற்று விடுவீர்கள்! வீடு கட்டியிருக்கும் சமயம், எதிராளி அவ்விடத்திற்கு "வருகை" தந்தால் இன்னும் அதிக பணம் உங்களுக்கு தர வேண்டியிருக்கும்! சாதாரணமாக இந்த ஆட்டம், பரமபதம் போலவே, லேசில் முடிவடையாது. பணம் காலியாகி விட்டால், எதிராளியிடமிருந்தோ பொதுக்கணக்கிலிருந்தோ கடன் பெற்றுக் கொண்டு ஆட்டத்தைத் தொடரலாம். அக்காலத்தில், நாங்கள் 2-3 நாட்கள் தொடர்ந்து (board-ஐ இரவு வேளை அப்படியே கலைக்காமல் வைத்திருந்து!) Trade ஆடியிருக்கிறோம்! இக்காலத்தில், இந்த ஆட்டம் "BUSINESS" என்றழைக்கப்படுகிறது.

இக்கட்டுரையை, என் ஒன்பதாம் (பத்தாவதோ?) வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இடம் பெற்ற, என் நினைவில் இன்று வரை பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதிமாற்கலைஞரின் கடல் வாழ்த்துக் கவிதையோடு, நிறைவு செய்கிறேன்! கடல் நிலத்திற்கு முன்னோடி என்பதையும், காற்றை கடலின் காதலனாக மற்றும் மேகத்தை காற்றும் கடலும் சேர்ந்துருவாக்கிய ஆண்மகவாக உருவகப்படுத்தியும், கடல் எவ்வளவு கழிவை உள்வாங்கினாலும் பரிசுத்தமாக இருப்பதையும், மிக மிக அழகாக இக்கவிதை வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வாழியே கடலே, வாழியே கடலே!
உலகினுக்கியைந்த ஒரு துணைக்கருவியே!
அலகிலா உருவம் அடைந்தோய்!
நிலத்தினை ஆக்கி அன்புடன் காக்கும் பரவாய்!
உன்னை அடுத்து வந்துறு நாவாய்களை
நன்னர் செலுத்தும் நங்காய்!
நின்னிளங் காதற்றலைவனாம் மோது காற்றினால்
புனர் காரெனும் புனிற்றிள மகனால்
பயிர்த் தொகையோடு உயிர்த் தொகை மகிழ
தாவா இன்பம் தருந்தனித்தாயே!
ஓவா தொல்லென ஒலிக்குங் கடலே!
உந்தன் பெருமையுமுயர்வும்
துன்றுமடியின்மையும் தூய்மையும்
எந்தனால் எடுத்தியம்பலியலுமோ!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, September 15, 2004

Cricket Related Fights!

This is for cricket lovers who are interested in debates where sparks fly!!!! I request the Bloggers to give their comments after reading the content pointed to, by both the LINKS!?!?!

Following link points to a REDIFF reader's article ( titled "BackChat: Shut up and get out, Prem Panicker") published nearly 2 years back. The reader, Kishan Jhanjharia is a big supporter of Sourav Ganguly and abused the REDIFF cricket editor, Mr. Prem Panicker, to a great extent.

http://www.rediff.com/cricket/2002/dec/19back.htm

My STRONG rebuttal to Kishen's views (titled "Of injuries, sham and otherwise") were also published in the REDIFF site, few days later!! Pl. see following link!

http://www.rediff.com/cricket/2002/dec/28back.htm

மாமழை வேண்டி பாடுவோம்!

கீழிருக்கும் இரு பாடல்கள், சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் அருளிய மழை வேண்டும் "திருப்பாவை" பாசுரங்கள்! இவற்றை பலர் கூடிப் பாடி நெஞ்சுருக வேண்டினால், "பாழியம் தோளுடைய பத்மனாபன்", உலகத்தார் மகிழ, "சார்ங்கம் உதைத்த சரமழை" பெய்ய அருளுவான் என்று வைணவர்கள் நம்பி வருகிறார்கள்! இறை நம்பிக்கை உள்ள சென்னை வாசிகள், முடிந்தபோது, இப்பாசுரங்களை கூறி, மழையை அன்புடன் அழைக்கலாம்! நாடு செழிக்க நாமும் வாழலாம் அல்லவா?

476:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி-வாங்க *
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

477:
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்*
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி*
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்*
பாழியம் தோளுடைய பற்பனாபன் கையில்*
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்*
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

Monday, September 13, 2004

Will Sourav Learn?

This piece written during World Cup'2003 is refurbished and published here!!!

Ganguly is the most arrogant, egoistic and non-thinking cricketer to have stepped on a cricket field for all the silken grace he displays when in prime cricketing form. His contribution as a batsman and captain counted for nothing (except his ton against the lowly Kenya) in our world cup campaign in 2003. Thanks to guys like Sachin, Dravid, Srinath, Nehra and Yuvaraj, we made it to the FINALS, only to lose badly owing to the utterly bad decision he made by putting Aussies into bat and not opting for a champion bowler like Anil Kumble, known for his "big match" temperament! He can't escape by saying that it was a TEAM decision, opting to field.

Why the hell did Sourav give himself a second spell in the key World cup match against England (though we won that match thanks to Nehra's superlative effort)? May be, just to get some cheap tailender wickets against his name! Sachin or Sehwag would have been a better alternative, any day !!! His blind support for the out-of-form Mongia defied all logic, when Agarkar and Bangar were begging to be given an opportunity for valuable match practice !?!?! Yuvaraj or Kaif should have been sent ahead of Mongia in the Ind-Eng match if our captain had displayed little more intelligence and had learnt his lessons properly from the earlier Ind-Zim match !?!?!?

It is utterly foolish of him to be so stubborn that his thinking is always correct, when reputable cricket analysts like Sunny, Sidhu and Shastri were airing diameterically opposite views. He even called the cricketers-turned-commentators a bunch of "Jokes", for criticizing him during our World cup campaign. A good captain needs to listen alike to both admirers and critics and should be willing to "take and try" the good points on offer.

Ganguly's arrogance and small mindedness were the main reasons for his refusal to give up the opening slot (when he was so pathetically out of form !?!?) to Sachin till he was forced by a public outcry to do so. Results immediately showed, when Sachin and Sehwag started opening !!!!! The so called Bengal tiger (actually a CAT!) must know that by trying to belittle a cricketing genius like Sachin, he is only belittling himself and harming the team cause. He has no business to do such a thing as the team is not his private property but represents our nation of many cricket lovers. It is high time Sourav keeps his mouth shut, keeps his cool, tries to value others' opinion, concentrates more on improving his cricketing skills, shows due respect to Sachin, Dravid and starts behaving in a manner befitting the cricket captain of India !!!! Let us see how he and the team perform in the ICC Champions trophy without the pivotal Sachin Tendulkar!?!?


Wednesday, September 01, 2004

இரு சின்னத்திரை தொடர்கள் பற்றி!

"மெட்டி ஒலி" (நான் பார்த்த வரை) குடும்ப சச்சரவுகளையும், ஆணாதிக்கத்தயும் அதிகமாக பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. தந்தை மகள்களுக்கு இடையே உள்ள கவிதை கலந்த உறவை, இயக்குனர் திருமுருகன் நேர்த்தியாக, கதையில் வரும் சில நிகழ்வுகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். செல்வம் என்ற கதாபாத்திரத்திரம், நிஜ வாழ்வில் பல ஆண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதோடு, அதில் நடிப்பவரும் பாத்திரத்தை உள்வாங்கி, மிக அருமையாக நடித்துள்ளார்.

அதே நேரம், "மெட்டி ஒலி" யை தொடர்ந்து வரும் "அண்ணாமலை"யில் வரும் நிகழ்வுகள் (குறிப்பாக, தந்தை, மகளுக்குத் தெரிய, கள்ள உறவு பாராட்டுவது, ஓரு பெண் வெட்கமற்று இன்னொருத்தியின் கணவனை அடைய முயல்வது, போதை மருந்து பழக்கத்தை முன்னிலைப்படுத்துவது, தீய குணமுள்ளோரையே அதிகமாக காட்டுவது) அதை அனைத்து சாராரும் பார்க்கத் தக்க ஒரு தொடருக்கு வேண்டிய தகுதியை குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. "சித்தி"யை வழங்கிய ரேடான் "அண்ணாமலை" கதையை இவ்வாறு எடுத்துச் செல்லும் விதம் வருத்தத்துக்குரியது.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails